தமிழகம்

காட்பாடி அருகே கேரம் விளையாட்டில் தகராறு- 6-ம் வகுப்பு மாணவனை அடித்து கொன்ற 8-ம் வகுப்பு மாணவன்

80views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அன்பழகன். இவரது மகன் சரவணன் (12) அருகில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.  அதே கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் சுரேஷ் என்பவரின் மகன் வசீகரன் (14) 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
விடுமுறையில் கேரம். போர்டு விளையாடி வந்து உள்ளனர். அப்போது 2 பேருக்கும் விளையாட்டில் தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டு உள்ளனர்.  இதில் ஆத்திரம் அடைந்த வசீகரன் பலமாக தாக்கியதில் சரவணன் சுருண்டு விழுந்து சம்பவ இடத்தில் இறந்தான்.   இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 8-ம் வகுப்பு மாணவனை தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!