தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 2-நாட்களாக குப்பை அள்ளும் பணியை நிறுத்தி போராட்டம்

48views
வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து 18, 19 தேதிகளில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  நேற்று முன்தினம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டும் உடன்பாடு ஏற்படவில்லை. 19-ம் தேதி வியாழக்கிழமை சில அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்பட இல்லை.  கடந்த நாட்களாக மாநகராட்சி பகுதியில் குப்பை கூளங்கள் குவிந்து உள்ளன.
மாநகராட்சி நேரடியாக துப்புரவு பணியாளர்களை நியமித்து பணிகள் செய்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆளும்கட்சி முக்கிய பிரமுகரின் பினாமி இந்த ஒப்பந்த பணி எடுத்து உள்ளதால் இந்த பிரச்னை உள்ளது.  அந்த தனியார் ஒப்பந்ததாரர் மாநகராட்சி அலுவலகத்தில் பணிக்கான பணத்தை வாங்கிவிட்டதாக தெரிகிறது?
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!