தமிழகம்

வேலூரில் எஸ். சி. எஸ்.டி.அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மண்டல முப்பெரும் விழா

81views
வேலூர் மண்டல எஸ்.சி.எஸ்.டி. அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது.  மாநில பொதுச்செயலார் பேர்ணாம்பட்டு முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளர் களாக இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே.ஆர்.ஆம்ஸ்ட்ராங், எஸ்.சி.எஸ். டி. அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
மாநிலத்துணை தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட செயலாளர் கதிரவன், தலைவர் பூபாலன், பொருளாளர் வில்சன், அமைப்பாளர் சுதந்திரன், மாநில துணை செயலாளர் சிவராஜ் தலைமை நிலைய செயலாளர் குமரன், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், கவுரவ தலைவர் கணேசன், மாநில மகளிர் அணி தலைவி சுகுணா, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வில்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வேலூர் மாவட்ட தலைவர் செல்லதுரை நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!