தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கிய சக்தி அம்மா, உயர்நீதிமன்ற நீதிபதி

77views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் இடம்பிடித்த 750 மாணவ-மாணவியர்களுக்கு கல்லூரி உயர்கல்வி பயில சுமார் 1.50 கோடி மதிப்பில் காசோலைகளை ஸ்ரீபுரம் சக்தி அம்மா மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் ஆகியோர் வழங்கினர்.  உடன் தமிழ் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பொற்கோயில், ஆஸ்த்ரேலியா பக்தை டாக்டர் ஆஸ்டிக் பூஜா, ஸ்ரீபுரம் இயக்குநர் சுரேஷ், மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!