தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சியினர் விரும்பினால், போட்டியிடத் தயார்? ஏசிஎஸ் வேலூரில் பேச்சு.

33views
வேலூரில் உள்ள பென்ஸ் பார்க் ஹோட்டலில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டமன்ற புதிய நீதிக்கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.  அதில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ. சி.சண்முகம் பேசினார்.
அவர் பேசும்போது 2 முறை வேலூர் பாராளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன்.  மீண்டும் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் (நிர்வாகிகளை பார்த்து) நிற்க சொன்னால் மீண்டும் நிற்பேன். அடுத்த முறை வரும்போது நீங்கள் சொல்லவேண்டும். தோல்வி அடைந்தாலும், டாக்டர் புரட்சிதலைவர் எனக்கு முதல்முதலாக எம்.பி.(வேலூர் எம்.பி) ஆன ஐ.டி.கார்டை என்னிடம் கொடுத்தார். அதை நான் இன்னும் வைத்துகொண்டு உள்ளேன், என்று பழைய எம்.பி.கார்டை, நிர்வாகிகளிடம் ஏ.சி.சண்முகம் மேடையில் காண்பித்தார்.  உடன் கட்சியின் செயல் தலைவர் ரவிக்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!