தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க செயற்குழுக்கூட்டம்

117views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக மாநில கௌரவத் தலைவர் சி.ராஜவேலு கலந்துகொண்டார்.  தமிழக அரசால் தற்போது வெளியிடப்பட்ட அரசாணை எண் : 1 39,(03.10.22)-ன் படி தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் இனி அனைத்து காலிப்பணியிடங்களையும் மற்றும் இனி ஏற்படப்போகின்ற காலிப்பணியிடங்களையும் அவுட்சோர்ஸிங் முறையில் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணியமர்த்தும் படி வந்த அரசாணையை திரும்ப பெற தமிழக அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு விடுப்பட்ட அகவிலைப்படி சரண்டர் லீவ் மற்றும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாவட்ட செயலாளர் பாலாஜி சிங், மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால், இணை செயலாளர் முத்துசாமி, பிரச்சார செயலாளர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், மனோகரன், மாவட்ட கெளரவ தலைவர் தாண்டவ மூர்த்தி, அலுவலக உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக முன்னாள் மாவட்ட கௌரவத் தலைவர் பொன்.வெங்கடேசன் மறைவிற்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. துணைத்தலைவர்
ஜெயபால் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!