தமிழகம்

வேலூர் கேரளா சமாஜம் சார்பில் 42- வது ஓணம் திருவிழா : மேயர் சுஜாதாபங்கேற்பு

39views
வேலூர் கேரளா சமாஜம் சார்பில் ஓணம் திருவிழாதோட்டப்பாளையத்தில் உள்ள சமாஜ் கலையரங்கில் நடைபெற்றது. ஓணம் விழாவிற்கு வேலூர் கேரளா சமாஜம்நிறுவனத் தலைவர் வேலூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் மேயர் சுஜாதா மற்றும் சத்துவாச்சாரி வள்ளலார் எம் எம்எம்மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.  விழாவில் வேலூர் மாமன்ற உறுப்பினர் முருகன் வேலூர் மா நாராயணன் கவிஞர் லட்சுமிபதி கலைஞர் பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் கேரள பரம்பரை நடனங்கள் கலை நிகழ்ச்சிகள்நடந்தன.  ஓணம் விருந்து விழாவில்  கலந்து கொண்டவருக்கு பரிமாறப்பட்டது.  ஏற்பாடுகளை வேலூர் கேரளா சமாஜம் நிறுவனர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன்,செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன்,பொருளாளர் சேது மாதவன்,டிரஸ்டி ரஞ்சித் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!