தமிழகம்

வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் : ஆந்திர அமைச்சர் நடிகை ரோஜா பங்கேற்பு

53views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக உடல் உறுப்புதான தினம் அங்குள்ள நாராயணி திருமண மண்டபத்தில் நடந்தது.  இதில் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா மற்றும் கணவரும் திரைப்பட இயக்குநரான ஆர். கே.செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.  மருத்துவமனை இயக்குநர் பாலாஜி தலைமை தாங்கினார். வேலூர் மேயர் சுஜாதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் கீதா, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மருத்துவமனையில் இதுவரை 50 சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் ஈடுப்பட்ட மருத்துவர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!