தமிழகம்

தமிழ்நாடு முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை காட்பாடி சேவூரில் துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன்

126views
வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியம் சேவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தைக் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கிவைத்தார்.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், நந்தகுமார், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன், துணைத்தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சி செயலாளர் சுரேஷ், பள்ளி ஆசிரியர் – ஆசிரியைகள், மாணவர்-மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!