தமிழகம்

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித்திருவிழா நடைபெற்றது.ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களை பிடித்து சென்றனர்.

65views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது முதலைக்குளம் கிராமம்.இக்கிராமத்தில் நடுமுதலைக்குளம்-கஸ்பா முதலைக்குளம்- கீழப்பட்டி-ஒத்தவீட்டுபட்டி- குளத்துப்பட்டி-கொசவபட்டி-அம்மன் கோவில்பட்டி-எரவம்பட்டி-பூசாரிபட்டி-மலையூர்-சின்னகொசவம்பட்டி என 12 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய கண்மாய் உள்ளது.இக்கண்மாயில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.முன்னதாக முதலைக்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் முதலைக்குளத்தில் கம்பகாமாட்சியம்மன் மற்றும் 18ம் படி கருப்பசாமி கோவிலில் தாங்கள் வேண்டியது நிறைவேறினால் அதன் நினைவாக மீன் குஞ்சுகளை வாங்கி முதலைக்குளம் பெரிய கண்மாயில் விடுவார்கள்.
பின்னர் வருடத்திற்கு ஒரு முறை கம்பகாமாட்சியம்மன் மற்றும் 18ம் படி கருப்பசாமி கோவில் கோவில் திருவிழாவின் போது மீன்பிடித்திருவிழா நடைபெறும்.இதற்காக அதிகாலை முதலே பல ஊர்களிலிருந்து ஆண்கள் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் முதலைக்குளம் பெரிய கண்மாயில் குவிந்தனர்.கடவுள் வழிபாடு முடிந்ததும் ஆர்வத்துடன் கண்மாயில் இறங்கி கெண்டை கெழுத்தி கட்லா விரால் உள்பட பலவகை மீன் வகைகளை பிடித்து உற்சாகமாகச் சென்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!