தமிழகம்

பேரையூர் ரோட்டில் தரமான முறையில் பொதுமக்களுக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி மும்முரம்

112views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 24 வார்டு பகுதிகளிலும் தூய்மை நகரமாக மாற்றும் முயற்சியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நகராட்சி 24 வார்டு பகுதிகளிலும் கழிவுநீர் வாய்க்கால் பூர்ண அமைப்பு செய்து புதிய வாய்க்கால் அமைக்கும் பணிக்காக முப்பது லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்ததாரராக அழகேசன் அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேரையூர் ரோட்டில் டி ஆர் எம் காம்பவுண்ட் தெருவில் தரமான முறையில் 3 அடி உயரம் உள்ள கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது பொது மக்களின் குறைகளை அறிந்து சேவை செய்து வரும் நகராட்சி அதிகாரிகளுக்கும் நகர மன்ற தலைவர் சகுந்தலாவிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!