தமிழகம்

சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம், பதங்கக்கங்களை வழங்கினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு. 

114views
ஜனாதிபதி திரெளபதி முர்மு, சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இதில் அவர் சிறப்புரையாற்றினார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் 1.18 லட்சம் பேரில் 50 சதவிகித்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
சென்னை பல்கலைக்கழகம், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், விவி கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி உள்ளிட்ட பல தலைவர்களை நமக்கு அளித்துள்ளது.  கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது.  நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். சவால்களை சமாளிக்கும் உறுதியை மாணவர்கள் பெற வேண்டும். சென்னை பல்கலைக்கழகம் மிகப்பெரும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தின் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தின் நிலை மேம்பட்டு வருகிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்றை இங்கே நான் சொல்ல விரும்புகிறேன்.  மந்திரம் கற்போம்.. தந்திரம் கற்போம்.. வானை அளப்போம்.. விண்மீனை அளப்போம்.. என்ற அவருடைய பாடல் உங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக அமையும். இவ்வாறு குடியரசு தலைவர் பேசினார்.
https://chat.whatsapp.com/IzJ1HhoF0oo8ujiDAslWWQ
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!