தொலைக்காட்சி

பொன்மாலைப் பொழுது”குழுவினரின் இயலிசைக் கொண்டாட்டம்

64views
அரங்கு நிறைந்த துபாய் எமிரேட்ஸ் தியேட்டரில் மென் குளிர் கால மாலை வேளையில், “பொன்மாலைப் பொழுது” குழுவினரின் இயலிசை கொண்டாட்டம் நடைபெற்றது .
மேடையில் ஏழு இசை கலைஞர்கள், இசைக்கருவிகள் வாசிக்க, பிரபல பாடகர் சத்தியபிரகாஷ் பொன்மாலைப்பொழுது பாடகர்களுடன் இணைந்து பல பாடல்களை பாடினார்.

அதைத் தொடர்ந்து, பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமையில் “இனிது இனிது வாழ்க்கை இனிது 2000க்கு பின்பே! 2000க்கு முன்பே!” என்ற தலைப்பில், அமீரகப் பேச்சாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் இந்திய தூதரக மற்றும் துணைத்தூதரக அதிகாரிகள் பாலாஜி, ராம்குமார் தங்கராஜ், காளிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் இணைந்து நிகழ்ச்சி முழுவதையும் ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு அன்று,புதுயுகம் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக இருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!