தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்தியதால் , தனியார் பள்ளி வாகனங்கள் சுங்கச்சாவடி முன்பு வாக்குவாதம் – பரபரப்பு.

241views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளித்துள்ள நிலையில், இன்று காலை சுங்கச்சாவடி வழியாக வந்த திருமங்கலம் நகரில் உள்ள தனியார் பள்ளி வாகனத்திற்கு, சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்த கூறி வலியுறுத்தியதால், பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை விட்டு கீழ் இறங்கி சுங்கச்சாவடி முன்பு வேனை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் , அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருமங்கலம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  நெடுஞ்சாலைத் துறையின் விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக் கூறி , திருமங்கலம் பகுதி தொழிலதிபர்கள் ,வாகன வேன் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் இது குறித்து இன்று டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரிடம் மனு அளிக்க போன நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!