தமிழகம்

அணைக்கட்டு தார்வழி கிராமத்தில் ராமர் பஜனை கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா முன்னிட்டு சிறப்பு பூஜை

42views
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, தார்வழி கிராமத்தில் ஸ்ரீ ராமர் பஜனை கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு கிருஷ்ணருக்கு புஷ்ப அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவினை மசாலாத்தார் வீடு வகையறா சிறப்பு பூஜையும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தகுமாரி விஜயகுமார், பின்னால் கவுன்சிலர் பகவதி பிரகாசம், ஊர் நாட்டான்மை மேட்டுக்குடி தர்மகர்த்தா, பஜனைகுழுவினர், நிர்வாகிகள் ஊர் பெரியோர்கள், ஊர்பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!