தமிழகம்

வள்ளிமலை மற்றும் ரத்தினகிரி முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்

66views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.  அதேப்போல் வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை , செயல் அலுவலர் சங்கர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!