தமிழகம்

காட்பாடி அடுத்த சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி பூஜை

99views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் புரட்டாசி மாத 4-ம் சனிக்கிழமை முன்னிட்டு காலையில் பால்,தயிர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு பெருமாள் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  சனிக்கிழமை பூஜை ஏற்பாட்டை பிரம்மபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் இராதகிருஷ்ணன் செய்து இருந்தார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தமிழரசி வெங்கடேசன், துணைத்தலைவர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பிரசாத விநியோகம் நடந்தது.பெருமாள் அலங்காரத்தை தென்னாங்கூர் கோயில் அர்ச்சகர் ஸ்ரீதரன் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!