தமிழகம்

திருவள்ளூர் ஸ்ரீவைத்யவீரராகவபெருமாள் சமேதகனகவல்லி தாயார் திருக்கோயிலில் வைகாசி அமாவாசை

95views
சென்னை அடுத்த திருவள்ளுவரில் அந்திர மாநில அலோபிகமடத்தின் நேரடி பார்வையில் ஸ்ரீ வீரராகவ பெருமாள் சமேத கனகவல்லி தாயார்திருக்கோயில் உள்ளது. வைணவ திருக்கோயிலில் இந்த தலத்தில் மட்டும் அமாவாசை திதி 1000 ஆண்டுகளுக்கு மேல் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களின் நோய், நொடி தீர இங்குள்ள குளத்தில் நீராடி, அமாவாசை அன்று சமர்ப்பணம் செய்ய வேண்டும், கோயிலின் குறிப்பிட்ட இடத்தில் உப்பு, மிளகு படைத்தால் நோய் தீரும் என்பது ஐதீகம், அதன்படி இன்று 26-ம் தேதி வைகாசி அமாவாசை திதி செய்யப்பட்டது. முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய பக்தர்கள் நீராடி திதி கொடுத்து வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயாரை வணங்கி சென்றனர். இந்த கோயிலில் மட்டும் அமாவாசை திதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!