தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் பாலமுருகனடிமை சுவாமியின் மெய்ஞ்ஞான விழா முன்னிட்டு அன்னதானம் !!

47views
வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமையின் 58 -வது மெய்ஞ்ஞானம் பெற்ற விழா கோயிலில் நடந்தது.  காலையில் மலைமீது வீற்றிருக்கும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.
பிற்பகல் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்ச்சியை பாலமுருகன் அடிமை சுவாமி துவக்கிவைத்தார்.  மயிலம் பொம்மபுரம் ஆதினம்சிவஞான பாலய சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் , ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார்ஆகிய உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஏற்பாடுகளை மெய்ஞான அன்னதான குழுவினர், செயல் அலுவலர் சங்கர், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!