தேசத்தின் நெருப்புப்பொறி நீ
பாரதி... நீ... இந்த தேசத்தின் நெருப்புப்பொறி... ஒரு நூற்றாண்டு முடிந்த பின்னரும் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறாய்... உன்னைத்தொட்டுப் பார்த்த பிறகுதான் ஒவ்வொருவருக்குள்ளும் பற்றிக்கொள்கிறது கவிதைத் தீப்பொறி ... நீ இந்த கலியுகத்தின் கவிதை போதை... ஏதோ ஒருவழியில் எல்லோருக்கும் கொஞ்சம் உன்னைப் பிடித்திருக்கிறது... புரட்சியில் நீயொரு புதுமைப் புரட்சியாளன் எல்லோரும் தாய்நாடு போற்றுகையில் நீ மட்டும்தான் தந்தையர் நாடு போற்றினாய்... நீ அக்கிரகாரத்தின் அதிசயக்கத்தக்க அக்கினிக்குஞ்சு... வெள்ளயனுக்கு எதிராக...