archiveகவிதை

கவிதை

தேசத்தின் நெருப்புப்பொறி நீ

பாரதி... நீ... இந்த தேசத்தின் நெருப்புப்பொறி... ஒரு நூற்றாண்டு முடிந்த பின்னரும் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறாய்... உன்னைத்தொட்டுப் பார்த்த பிறகுதான் ஒவ்வொருவருக்குள்ளும் பற்றிக்கொள்கிறது கவிதைத் தீப்பொறி ... நீ இந்த கலியுகத்தின் கவிதை போதை... ஏதோ ஒருவழியில் எல்லோருக்கும் கொஞ்சம் உன்னைப் பிடித்திருக்கிறது... புரட்சியில் நீயொரு புதுமைப் புரட்சியாளன் எல்லோரும் தாய்நாடு போற்றுகையில் நீ மட்டும்தான் தந்தையர் நாடு போற்றினாய்... நீ அக்கிரகாரத்தின் அதிசயக்கத்தக்க அக்கினிக்குஞ்சு... வெள்ளயனுக்கு எதிராக...
கவிதை

அப்துல் கலாம் ஒரு கலங்கரை விளக்கம்

இவர்... அரசியலில் இருந்தும் அரசியல் செய்யத் தெரியாத ஞானி... அகில உலகையே அதிர வைத்த அதிசய பொக்ரான் விஞ்ஞானி... ராஷ்டிரபதி அரண்மனையில் உலவிய அதிசய புத்தன்.. கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு நடந்த ஆன்மீகச் சித்தன்... எல்லோரும் குத்து விளக்குகளை ஏற்றிய நேரத்தில் இவர் மட்டும்தான் கனவு புத்தி விளக்குகளை ஏற்றினார்... அதனை ஒவ்வொரு பள்ளிக்கூடமாய் சென்று ஒவ்வொரு மாணவர் உள்ளத்திலும் பூட்டினார்... அரசராய் இருந்த பெருங்கோதான் என்றாலும் மனைவி...
கவிதை

நவஜீவன் கவிதைகள்

சிரஞ்சீவியம் என் கல்லறையில் வந்துநின்று கண்ணீர் வடிக்காதே கல்லறைக்குள் நானில்லை நான் மீளாத்துயில் கொள்ளவில்லை. வெளியாயிரம் கொண்டு வீசிவரும் காற்றுநான்; பனிப்பரப்பில் வயிரமணிப் பட்டொளியாய் ஜொலிப்பது நான்; முற்றிய தானியத்துப் பொலிவின் கதிரொளி நான்; கார்காலப் பூமழைநான் நீ கண்விழிக்கும் விடியலிலே வட்டமிட்டு வானில் பறந்தேகும் புள்ளினம் நான்; இரவு வானில் இழைந்து மினுங்குகிற தாரகை நான்; மகளே என் கல்லறையில் அழுது புலம்பாதே; கல்லறைக்குள் நானில்லை மரணம் எனக்கில்லை....
கவிதை

பி.மா. வேதா (எ) தாரகை கவிதைகள்

அடிமை விலங்கொடிப்போம் ஒரு பெண் பிறந்தால் தந்தைக்கு அடிமை! மணந்தால் கணவனுக்கு அடிமை! பெற்றால் பிள்ளைக்கு அடிமை! அவளின் கனவுகள் கைதாகி விடுகிறது! அரிவையின் ஆசைகள் அழிக்கப்படுகிறது! நீ அப்படி இருந்தால் அழகாய் இருப்பாய்! இப்படி இருந்தால் அழகாய் இருப்பாய் அழகைப் பற்றி பேசி பெண்ணை மடமை செய்து அடிமை செய்கிறது ஒரு கூட்டம்! ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தலைவியானவள் தினமும் இயந்திரமாக சுழன்று சுழன்று அடிமைப் பிடியில் கட்டி...
கவிதை

தமிழகத்தின் போர்க்குரல் தந்தை பெரியார்!!

புரியாததை புரிய வைத்த தென்னாட்டு இங்கர்சால்! அறியாமை இருளை கிழிக்க வந்த ஈரோட்டின் கலகக்குரல்! இராட்டையின் நூலால் களத்திற்கு வந்தவன்! பூநூல் வாலை அறுக்க வாளாய் நிமிர்ந்தவன்! வங்கக் கடலலையாய் ஓயாமல் சுழன்றவன்! மங்கிக் கிடந்த வாழ்வில் ஒளிவிளக்கானவன்! இவன் கிழவனல்ல- இருளை கிழிக்க வந்த கிழக்குத்திசை! தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு மொத்தமாய் அத்தனைக்கும் வைத்தான் வேட்டு! எங்கும் இருள் கொட்டும் மழை சுழன்றடிக்கும் சூறாவளி திக்கற்ற தேசத்தில்...
கவிதை

செல்வி சிவஞானம்-கவிதை

மணியடித்து பள்ளி விட்டு மாலை வீடு வந்ததுவுமே அம்மா சொல்லும், உன் குள்ளப்பசு கயிரறுந்து ஓடிருச்சு.. புத்தகப்பையை வீசிய கையோடு ஓடுவேன் எங்கள் தோட்டம் கடந்து செட்டியார் வயல் பார்த்தால் இல்லை கெண்டைக்கால் உயரமுள்ள சோலக் காட்டிற்குள் மேய்ந்தால் தெரியும், அங்கும் இல்லை... மூச்சிரைக்க வரப்போறம் ஓடி இரு ஆளுயர கரும்பு காட்டிற்குள் போக பயந்து ஓ வென அழுமென் குரல் கேட்டு ஓடி வந்து என் முகம் பார்த்து...
கவிதை

கவிஞர் பாக்கி கவிதைகள்

உனக்காக கவிதை எழுதினேன் நமக்காக காதல் எழுதினேன் இதில் என்ன பிழை இரவில் வாசித்த கனவுகளெல்லாம் பகலில் கவிதையாகி போனது அவளால்... அவள் இதழின் ஈரம் வாங்கி என் இதயத்தின் தாகத்தை தீர்த்துக் கொண்டேன்... ஆயிரம் ரோஜாக்களை முத்தமிட்டாலும் எதுவும் உன் இதழ்களுக்கு ஈடாகாது... இதயம் மாற்றும் அன்பு சிகிச்சைதான் காதல் அவளுக்காக நானும் எனக்காக அவளும் பிரிந்திருந்தது ஒன்றாய் துடிக்கிறோம்... அவள் நெற்றியில் வைத்த முத்தம் அந்த நிலவில்...
அறிவிப்புஇலக்கியம்

மு.முருகேஷ் எழுதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானிய மொழியில்…

ஜப்பானிய மூன்று வரி கவிதையான ஹைக்கூ கவிதைகளை தமிழுக்கு முதன்முதலாக மகாகவி பாரதி, தனது கட்டுரையொன்றின் வழியே 1916-இல் அறிமுகம் செய்து வைத்தார். 1984-ஆம் ஆண்டிலிருந்து தமிழில் நேரடியான ஹைக்கூ கவிதை நூல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழில் ஹைக்கூ நூல்கள் வெளிவரத் தொடங்கிய காலந்தொட்டு, தமிழ் ஹைக்கூ கவிதைத் தளத்தில் 37 ஆண்டுகாலமாகத் தீவிரமாக இயங்கி வருபவர் மு.முருகேஷ். இதுவரை 11 ஹைக்கூ நூல்களை வெளியிட்டுள்ள இவரது ஹைக்கூ கவிதை...
கவிதை

அம்மாவும் அழகான பையனும்

அம்மாவும் அழகான பையனும்   அம்மா ஏன் கழற்றி வைத்துள்ளாய் இப்பொழுதெல்லாம் தாலி கொடியை.... அக்கறையாக கேட்கும் அன்பு மகனை வாரி அணைத்து விட்டு சொல்கின்றாள்...... அப்பா இல்லையடா அதனால் தான்.... ஆனாலும் நீதானே அப்பாவின் மனைவி... ஆமாம்பா அதிலென்ன சந்தேகம்.... அப்ப ஏன் தாலியை கழட்டி வெக்கனும்...... அறியா சிறுவன் தான் என்றாலும் எத்தனை ஆழமான கேள்விகள் அவனுள்ளும்.... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு சொல்லியே.... வளரவளர அவனை...
1 4 5 6
Page 6 of 6

Right Click & View Source is disabled.

error: Content is protected !!