செய்திகள்தமிழகம்

சிவகாசி பகுதியில் பலத்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி…..

37views

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் சில நாட்களுக்கு பின்பு, இன்று காலை நல்ல வெயில் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது தூறல் மழை, பின்னர் சாரல் மழை, பின்பு பலத்த மழை என பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.

இதனால் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகள் குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் இல்லாத நிலையில், இன்று பிற்பகல் வரை வெயில் கடுமையாக இருந்தது. பின்னர் மாலை நேரத்தில் மேகங்கள் திரண்டு வந்தது. சற்று நேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யத் துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. சிவகாசி புறநகர் பகுதிகள், அம்மன்நகர், நாரணாபுரம், முதலிபட்டி, கல்போது, செங்கமலப்பட்டி, ஆண்டியாபுரம், பாறைப்பட்டி, மீனம்பட்டி, அனுப்பங்குளம், விஸ்வநத்தம், சாட்சியார்புரம், ரிசர்வ்லைன், மானகசேரி, வடபட்டி, மல்லி உள்ளிட்ட பல இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!