தமிழகம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் போலீஸ் என கூறி ரூ.10 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு

159views
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வரும் நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாவா பக்ருதீன் (வயது 43) என்பவரது கடைக்கு அடிக்கடி செல்போன் ரீசார்ஜ் மற்றும் கவர் வாங்குவதற்காக வந்த மர்ம நபர் ஒருவர் தன்னை மத்திய சிறையின் காவலர் என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 12 ஆம் தேதி இரவு அந்த நபர் தனக்கு செல்போன் கவர் வேண்டும் என்று கூறவே கடையில் இருந்த பக்ருதீன் செல்போன் கவர் எடுப்பதற்காக வெளியே சென்று உள்ளார். அந்த நேரத்தை பயன்படுத்திய வாலிபர் கடையின் பணபெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடி செய்து தப்பி சென்றார்.
இது தொடர்பாக பாபா பக்ருதீன் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார் இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அவற்றில் இடம்பெற்று உள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகரில் போலீஸ் என கூறி செல்போன் கடையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!