தமிழகம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானத்தின் மூலம் 5 பேருக்கு வாழ்வு அளித்த ராணிப்பேட்டை ஜெபகுமாரி

131views
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தகரக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராபர்ட் என்பவரின் மனைவி ஜெபகுமாரி (33). ஜெபகுமாரி அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.  தனது கணவருடன் கடந்த ஞாயிறன்று மாலை இரு சக்கரவாகனத்தில் ராணிப்பேட்டை அடுத்த அணைக்கட்டு கூட்ரோடு சர்ச் அருகே வந்தபோது ஜெபகுமாரி தவறி விழுந்து படுகாயம் அடைந்து உள்ளார். அவரை வாலாஜா அரசு மருத்துவமனை சேர்த்தனர்.
பின்பு மேல்சிகிச்சைக்காக ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்தார்.  அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.  அதன்படி சென்னை தனியார் மருத்துவமனைக்கு இதயம், நுரையீரலும், சிறுநீரகம் 2 மற்றும் ஒரு கல்லீரல்ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பபட்டு 5 பேருக்கு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பின் மறுவாழ்வு பெற்றனர். இவருக்கு சாமுவேல்(9) 5-ம் வகுப்பும், ரித்திகா(7) 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!