தமிழகம்

சோழவந்தானில் இரவு முழுவதும் கனமழை.. பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணி..

44views

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கனமழை பெய்தது.

ஏற்கனவே வைகை ஆற்றில் நீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும்.கனமழை காரணமாக வைகைஆற்று கரையோர பகுதிகளில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல சோழவந்தான் பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது சோழவந்தான் பேரூராட்சி சார்பில் வைகைஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!