தமிழகம்

ராமநாதபுரத்தில் புதிய வீடு கட்டும்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளர் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

28views
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வரும் ரமணீஸ்வரி, சந்தை திடல் அருகே மகப்பேறு மருத்துவமனை நிர்வகித்து வருகிறார். இவர் சேதுபதி நகர் 4 வது தெருவில் புதிய வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் மாடிப்படி சென்ட்ரிங் அமைத்து கட்டப்பட்டுள்ளது. இன்று இங்குள்ள தற்காலிக சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வன்னிக்குடியைச் சேர்ந்த சவுந்தர பாண்டி(40) , அச்சுந்தன்வயல் பகுதியைச் சேர்ந்த மாதவன் (52) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!