தமிழகம்

ராஜபாளையத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டின் சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. விபத்து நடந்த இடத்தில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

48views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் வஷீர் முகமது. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இன்று மாலை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் இருந்து எரிவாயு வெளியேறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் பற்றிய தீ சமையலறை முழுவதும் பரவி அனைத்து பொருட்களுக்கும் பரவியது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் காரணமாக சிலிண்டர் மேல் பகுதி வெடிப்பு ஏற்பட்டு எரிவாயு முழுவதுமாக வெளியேறி உள்ளது.
சமையலறையில் இருந்து புகை வருவதை அறிந்த வீட்டின் உரிமையாளர் வஷீர் முகமது தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி சமையலறையில் பற்றி எரிந்த தீயை முழுவதுமாக கட்டுப்படுத்தினர்.
விபத்து நடந்த போது அருகே யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தீ விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!