தமிழகம்

திமுக பொது கூட்டத்தில் “பாரத் மாதாகி ஜெய்” கோஷமிட்டவருக்கு அடி உதை; பாவூர்சத்திரம் பகுதியில் பரபரப்பு..

26views
திமுக கூட்டத்தில் “பாரத் மாதாகி ஜெய்” கோஷமிட்டதால் தர்ம அடி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கலந்து கொண்டு பொதுக் கூட்டத்தில் பேசினார்.
பொதுக் கூட்டம் முடித்த பிறகு ஆர்.எஸ். பாரதி காரில் ஏறி புறப்பட்ட போது நெல்லை தென்காசி சாலையில் வெள்ளை நிற காரில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் குற்றால அருவியில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் திமுகவின் கொடிகள் மற்றும் கூட்டத்தை கண்டதும் பாரத் மாதா கி ஜெய் என கோசம் போட்டனர். சாலையில் கூட்டம் முடிந்து கிளம்பிக் கொண்டிருந்த திமுகவினர் பாரத் மாதா கி ஜெய் என கோசமிட்டு சென்ற காரை மறித்து எவ்வாறு திமுக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து பாரத் மாதா கி ஜெய் என கூறுவாய் என கூறி காருக்குள் இருந்த நபர்களை 30க்கும் மேற்பட்ட திமுகவினர் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர்.
மேலும் காரை எட்டி உதைத்தால் கார் கண்ணாடி உடைந்தது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றும் ஆக்ரோஷத்துடன் திமுகவினர் அந்தக் காரில் இருந்து கோஷமிட்டவர்களையும்,காரையும் தொடர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்தவர்களை அங்கிருந்து புறப்படுமாறு அறிவுறுத்தியதோடு திமுகவினரையும் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஒரு வழியாக காரை போலீசார் சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!