தமிழகம்

ஏ ஜே எம் பவுண்டேசன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் அன்னை தெரசா நற்பணி இயக்கம், மேலராமன்புதூர் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம்

205views
நாகர்கோவில் மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலயத்தில் உள்ள அன்பர் அரங்கத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு ஏ ஜே எம் பவுண்டேசன் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மற்றும் வேணாடு ஹெல்த்கேர் & சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் பிரவீன் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலராமன்புதூர் ஊர்த்தலைவர் முன்னிலையில் மேலராமன்புதூர் பங்குத்தந்தை அர்ச்சித்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் நீதிமன்ற வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பெஜான்சிங் கண் மருத்துவமனை, பென்சாம் மருத்துவமனை மற்றும் டேவிட் பல் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
கண்பார்வை குறைபாடு, பல் பிரச்சினைகள், சளி, இருமல், காய்ச்சல், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பரிசோதனைகள் ஆகியவற்றிற்கு இம்முகாமில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். நிர்வாகிகள் ஜான், பெஞ்சமின், ஆனி, ஜெயந்த், சமூக ஆர்வலர் முகம்மது சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!