தமிழகம்

நாகர்கோவில் இராமன்புதூரில் நடைப்பெற்ற உலக மருத்துவ தினம்

153views
நாகர்கோவில் இராமன்புதூரில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு. இராதாகிருஷ்ணன், தலைமையில் “உலக மருத்துவர் தினம்” சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலரும் தென்குமரி கல்வி கழக செயலருமான வெற்றிவேல் வழக்கறிஞர், மற்றும் ஹரிதாஸ், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலந்து கொண்ட மருத்துவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டன. மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகரின் மருத்துவ சேவையை பாராட்டும் விதமாக சிறந்த மருத்துவ சேவகர், என்று பாராட்டி அனைத்து சிறப்பு விருந்தினர்களும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
மரு. இராதாகிருஷ்ணன், மரு.தி.கோ.நாகேந்திரன், மரு.ஷாலினி ஆகியோர் இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பை பரிமாறினார்கள்.
உலக மருத்துவ தினத்திற்கான ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் தலைவி தமிழ்செல்வி, ஸ்ரீதேவி பிரின்ஸ் ,சுபாஷ் செந்தில், கலா , ராணி மற்றும் தாணுமாலயன் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!