தமிழகம்

ஆம்பூர் மாங்கா தோப்பு பகுதியில் நடைபெற்ற தகராறில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் ஒருவர் பலி

162views
ஆம்பூர் மாங்கா தோப்பு, மலைமேடு பகுதியைச் சேர்ந்த அல்லாஹ் பகத் (35) இவர் மாங்காய் தோப்பு பகுதியில் நேற்று நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதில் படுகாயமடைந்த அல்லாஹ் பகத்தை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் நகர காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!