தமிழகம்

9வது உலக யோகா தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சியில் ஈடுப்பட்டனர்

52views
மதுரை மாவட்டம் மதுரைவிமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் ஒன்பதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் .  மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தலைமையில் யோக பயிற்ச்சி செய்தனர்.
யோகா பயிற்சி மூலம் மனநலம் உடல் நலம் பாதுகாக்கவும் யோக பயிற்சி உதவும் யோகா பயிற்சியினை தொடர்ந்து செய்தால் மன அழுத்தம், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம் என பயிற்ச்சியாளர் கூறினார்.  யோக பயிற்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 180 பேர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!