தமிழகம்

முடங்கிய பிரீத் அனலைசர்

107views
மதுரை பைபாஸ் சாலை போடி லைன் மேம்பாலத்தில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது உச்சி வெயில் மண்டையை தொட போதை தலைக்கேறி கிறுகிறுவென வரவே முன்னால் செல்லக்கூடிய வாகனம் கூட தெரியாத அளவிற்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி பின் அருகே சென்ற கார் மீது மோதி வாகனத்தை நிறுத்தினார்.
இரு சக்கர வாகனத்தில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து பிரித் அனலைசர் கருவியை கொண்டு வரச் சொல்லி போதை ஆசாமியை ஊத சொன்னார். ஊத மறுத்து பீப்பி ஊதுவது போல பயன்படுத்த கோவம் அடைந்தனர் போலீசார். “ஏன் சார் என்ன கொடுமை படுத்துறீங்க” என மது போதையில் இருந்தவர் கேட்க அங்கு சிறிது நேரம் சிரிப்பு அலை உண்டானது.
பிறகு ஒரு வழியாக பிரீத் அனலைசர் கருவி வரலாறு காணாத அளவு சுமார் 315 க்கு மேல் காட்டியது போலீசாரையே அதிர செய்தது. பிரீத் அனலைசர் முடங்கக்கூடிய அளவிற்கு மூக்கு முட்ட குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை லைசன்ஸ் இல்லாமல் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் மீது முதலில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
விபத்து குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!