தமிழகம்

நடப்­போம் – நலம் பெறு­வோம் Health Walk திட்­டம்: மதுரையில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்பு

82views
சட்­டப்பேர­வை­யில், கடந்த ஆண்டு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை மானி­யக் கோரிக்­கை­யின் போது, “உலக சுகா­தார அமைப்­பின் தர­வு­கள்­படி உடற்­ப­யிற்சி செய்­வது நீரி­ழிவு மற்­றும் இரத்த அழுத்த நோய்­க­ளின் தாக்­கத்தை 27 சத­வீ­த­மும், இதய நோயின் தாக்­கத்தை 30 சத­வீ­த­மும் குறைக்கின்­றது என்று அறி­யப்­ப­டு­கி­றது.  நடை­ப­யிற்­சி­யா­னது மக்­களை சுறு­சு­றுப்­பா­க­வும் ஆரோக்­கி­ய­மான எடை­யு­டன் இருக்­க­வும் நாள்­பட்ட உடல் பிரச்­சி­னை­கள் மற்­றும் மன அழுத்­தத்தை குறைக்­க­வும் உத­வு­கி­றது.
ஆகவே ‘நடப்­போம்; நலம் பெறு­வோம்’ என்­ப­தற்­கிணங்க பொது­மக்­க­ளின் நலன் மற்­றும் ஆரோக்­கி­யத்­தைக் கருத்­தில் கொண்டு, அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் உள்ள உள்­ளாட்சி அமைப்­பு­களு­டன் இணைந்து 8 கி.மீ. தூரம் கொண்ட நடை­பா­தை­யைக் கண்­ட­றிந்து, ஆரோக்­கி­ய­மான நடை­ப­யிற்சி மேற்­கொள்­வ­தற்­கான நடை­பா­தை­ கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.

இதன் அடிப்­ப­டை­யில் அனை­வ­ரும் தினந்­தோ­றும் நடை­ப­யிற்சி மேற்­கொள்ள ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தோடு ஒவ்­வொரு மாத­மும் முதல் ஞாயிற்­றுக்­கி­ழமை உள்­ளூர் மக்­க­ளு­டன் இணைந்து மாவட்ட அலு­வ­லர்­கள், சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் மற்­றும் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் ஆகிய அனை­வ­ரும் “சுகா­தார நடை­ப­யிற்­சி­யில்” பங்­கேற்­பார்­கள்.

நடை­ப­யிற்­சி­யின் முடி­வில் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை மற்­றும் நல்­வாழ்வு குறித்த விழிப்பு­ணர்வை ஏற்­ப­டுத்தி சிறப்பு மருத்­துவ முகாம்­கள் நடத்­தப்­ப­டும்.” – என்று அறி­விக்கப்பட்டது.  சட்­டப்பேர­வை­யில் வெளி­யி­டப்­பட்ட இந்த அறி­விப்­பின்­படி, மாவட்­டந்­தோ­றும் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் சென்று, இத்­திட்­டம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தைக் கண்­காணித்­தும், செம்­மை­யுற அப்­பணி நிறை­வுற வழி­காட்­டி­யும் விரை­வு­ப­டுத்தி வந்­தார்.

மக்­கள் நலம் பேணும் இந்த மகத்­தான திட்­டம் தமிழ்­நாட்­டின் 38 மாவட்­டங்­க­ளி­லும் சிறப்­புற நிறை­வுற்று, அதன் தொடக்க விழா இன்று (4.11.2023 – சனிக்­கி­ழமை) காலை நடைபெற்றது.
‘நடப்­போம்; நலம் பெறு­வோம்’ எனும் நோக்­கில் தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் 8 கிலோ மீட்­டர் (10,000 அடி­கள்) தூரம் நடக்­கும் நடைப்­ப­யிற்சி Health Walk நடை­பா­தை­கள் உரு­வாக்­கப்­ப­டும் – என்று வெளி­யிட்ட அறி­விப்­பின்­படி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4.11.2023 – சனிக்­கி­ழமை) காலை சென்னை – அடை­யாறு முத்­து­லட்­சுமி ரெட்டி பூங்கா (ஆவின் பூங்கா) அரு­கில் துவங்கி 2 கிலோ மீட்­டர் தூரம் நடந்து சென்று, பெசன்ட் நகர் கடற்­கரை சாலை­யில் இத்­திட்­டத்­தைத் துவக்கி வைத்தார்.  மற்ற 37 மாவட்­டங்­க­ளி­லும் ‘நடப்­போம் – நலம் பெறு­வோம் Health Walk திட்­டம் காணொலி வாயி­லா­கத் துவக்கி வைக்­கப்­பட்டது.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்த நிகழ்வில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல்,மேயர் இந்திராணி பொன் வசந்த், எம்.எல்.ஏ., வெங்கடேசன்,துணை மேயர் நாகராஜன்,மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன்,கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா,காவல் ஆணையர் லோகநாதன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி,பாண்டிச்செல்வி,அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல்,மாநகராட்சி நகர் நல அலுவலர் வினோத்,சுகாதார குழு தலைவர் ஜெயராஜ்,மாமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!