மதுரை மாவட்டம், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு கூட்டுறவுத்துறையின் மூலம் குறைந்த விலையில் இதுவரை 12 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் மூலம் பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு இதுவரை 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்ததாவது:- தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. அதிகபட்டசமாக கிலோ ரூபாய் 180 வரையில் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டது. இதனால், இபொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு கூட்டுறவுத்துறை, தோட்டக் கலைத்துறையின் மூலம், விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து மலிவு விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 4 சுயசேவை பிரிவு அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) உட்பட மொத்தம் 25 இடங்களில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தக்காளி சந்தை விலை கிலோ ரூபாய் 160 முதல் ரூபாய் 180 வரை இருந்த நிலையில் கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து கிலோ ரூபாய் 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாளொன்றிற்கு சராசரியாக 750 முதல் 800 கிலோ வரையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மட்டும் கடந்த 16 நாட்களில் மொத்தம் 12 ஆயிரம் கிலோ (12 டன்) தக்காளி பொதுமக்களுக்கு குறைந்த விலையில விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் நலன் காக்கப்பட்டதோடு, தக்காளி விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என , மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.