கட்டுரை

இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன்

69views
ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் யார் எப்படி இருந்தாலும் இன்று எப்படி உணரப் போகிறேன், இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.  உங்களுடைய செய்கைகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதை எந்த மாதிரி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் செய்கைகளைப் பற்றி, உங்களுக்குள் வரும் சிந்தனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீகள்… உங்களுக்கு அது திருப்தியாக இருக்கிறதா, உங்களுக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறதா, அடிக்கிற காற்றில் இலக்கு இல்லாமல் பறக்கும் சிறு இறகாக பிறருடைய செய்கைகளுக்கேற்ப சுழன்று இயலாமையில் தவிக்கப் போகிறீர்களா? அல்லது திடமாக இருந்து மகிழ்வாக உங்கள் தினத்தைக் கொண்டு செலுத்தப் போகிறீர்களா?என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராத எந்த செயலும், சிந்தனையும் உங்களுக்கானது அல்ல. உங்களுடன் இயைந்து போகாதவற்றை உங்களை விட்டும் விலக்கி விடுங்கள், மகிழ்ச்சி அங்கு இடம் பெயரும்.
Dr.டாக்டர் ஃபஜிலா ஆசாத். வாழ்வியல் மற்றும் மனநல நிபுணர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!