தமிழகம்

சனாதன ஒழிப்பு மாநாடு சர்ச்சை எதிரொலி : கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது

65views
சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து மதத்தை (சனாதனத்தை) அழிப்பேன் என பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைதுசெய்ய கோரியும் , அந்த கூடத்தில் கலந்துகொண்ட தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு பதவிவிலக கோரியும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஓசூர் மலைமீதுள்ள இந்து சமய அறநிலையதுறை அலுவலகம் முற்றுகை போராட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் ஓம் வரவேற்புரையாற்றினார் , மாநில செய்தி தொடர்ப்பாளர் C.நரசிம்மன் Ex.MP , அன்பரசு , பொருளாளர் ஸ்ரீனிவாசன் , மாநில நிர்வாகிகள் சுதா நாகராஜன் , ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்தும் , அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பட்டது.  மேலும்,  ஓசூர் மாநகரை சேர்ந்த பிராமண சங்கத்தினர் , சிவாச்சாரியார்கள் , ஓம் சக்தி மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
செய்தியாளர் : A. முகமத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!