தமிழகம்

கீழக்கரை ஷஹீத் வலியுல்லாஹ் தர்ஹா கந்தூரி விழா கொடியேற்றம்

60views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு ஓடைக்கரை பள்ளி ஜமாத் நிர்வாகத்திற்கு உட்பட்ட மஹான் 18 வாலிபர்கள் ஷஹீத் வலியுல்லாஹ் தர்ஹா 849 ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று மாலை அஸர் தொழுகைக்கு பின் வெகு விமர்சையாக நடந்தது. உலக நன்மை வேண்டி  கீழக்கரை புது பள்ளி கதீப் மன்சூர் நூரி ஆலிம், ஜமாஅத் உலமாக்கள் ஆரிப் அன்வாரி ஆலிம், அப்துல் சலாம் பாக்கவி ஆலிம், கலீல் ரஹ்மான் ஆலிம், முஹமது அஸ்லம் ஆலிம் ஆகியோர் சிறப்பு பிராத்தனை செய்தனர். ஜமாஅத் பிரமுகர்கள் க.கு.அப்துல் ஜப்பார், ஜனாப் சிக்கந்தர் பாட்ஷா, சாகுல் ஹமீது (எ)ஹாஜா, கீழக்கரை புரவலர்கள் சீனாதானா செய்யது அப்துல் காதர், பிஆர்எல் சதக் அப்துல் காதர், கீழக்கரை நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கீழக்கரை ஒடைக்கரை பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சீனி முஹமது , பசீருதீன், ஹாஜா, ராசிக் பரீத், சபிர்கு, 18 ஷுஹதாக்கள் ஜகாத் கமிட்டி உறுப்பினர்கள் ஹபீப் முஹமது சுஐபு,
சுல்தான், யூசுப் அமீன், ஹபீப் முஹமது நெய்னா, குத்புதீன், பாஹிர்தீன் தலைமையில் எம்ஆர்எப் இளைஞர் குழு ஏற்பாடுகளை செய்தனர்.

ஜமாத்தை நிர்வகிக்கும் கீழக்கரை உஸ்வத்துன் ஹஸனா முஸ்லிம் சங்க தலைவர் யூசுப் சாஹிப், மேலாளர் அப்துல் ரசாக் மற்றும் சங்க உறுப்பினர்கள் விழா சிறக்க ஒத்துழைத்தனர். அரூஸ்யா பாடசாலை மாணவர்கள், அனைத்து ஜமாத்தார், கீழக்கரை நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  மேலும் 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரார்த்தனை நிகழ்வில் தினமும் இரவு மவ்லிது ஓதி நார்சா வழங்கப்படும். கீழக்கரை டிஎஸ்பி சுதிர்லால் அறிவுறுத்தல் படி இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
செய்தியாளர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!