தமிழகம்

காட்பாடியில் பக்தர்களுக்கு தங்ககவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்

136views
வேலூர் மாநகராட்சி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் உள்ளது.  ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் அஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் காட்சி தருவார்.  அதன்படி 2 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டும், வடைமாலை சாத்தப்பட்டும் விசேஷ பூஜை, காலை, இரவில் நடந்தது.  சுவாமி தரிசனத்திற்கு பின்பு பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது.  அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!