தமிழகம்

காட்பாடி 66,புத்தூர் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை பெருவிழா

112views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66.புத்தூர் அசிரீர்மலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் செவ்வாய் கிழமை பரணி காவடியும், புதன்கிழமை ஆடிக்கிருத்திகையும் கொண்டாடப்பட்டது.
ஆடிக் கிருத்திகை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபராதனை நடந்தது. சுற்றுப்புரத்திலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர்.
பகல் அன்னதானம், இரவு வாணவேடிக்கை ஆடல் பாடல் நிகழ்ச்சி பின்தெருக்கூத்து நாடகம் நடந்தது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர், நாட்டாண்மை தாரர்கள், மேட்டுக்குடி பெருத்தனக்காரர்கள், இளைஞர்கள், இந்து முன்னணியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!