தமிழகம்

காட்பாடிஅடுத்த பிரம்மபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

27views
வேலூர் மாவட்டம் காட்பாடிஅடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் யாக கால பூஜை, கணபதி பூஜை, கலசபூஜை, 2-வது யாக கால பூஜை, கலச புறப்பாடு, பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில் வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் வி. ராமு, வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்தர் கணேஷ், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.பின்பு அன்னதானம் செய்யப்பட்டது.  ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!