தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடிக்கு இரங்கல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி !!

124views
வேலூர் மாவட்டம் காட்பாடிகாந்தி நகரை சேர்ந்த தமிழகத்தில் உள்ள திருப்பதி – திருமலை தேவஸ்தான தமிழக தலைவரும் பிரபல தொழிலதிபருமான சேகர்ரெட்டியின் தந்தை கடந்த வாரம் காலமானார்.
சேகர்ரெட்டிக்கு ஆறுதல் சொல்ல அதிமுக பொதுச் செயலாளரும், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை காட்பாடிக்கு ரயிலில் வந்து காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர்ரெட்டி வீட்டிற்கு வந்து அவரின் தந்தையின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்பு ஆறுதல் கூறினார். தொழிலதிபர் சேகர்ரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி, அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய, பகுதி செயலாளர்கள், அதிமுகவின் முக்கியபிரமுகர்கள் இந்த அனுதாப நிகழ்வில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!