தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ! கிராம மக்கள் பங்கேற்பு !!

15views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தலைமை தாங்கி நடத்தினார். ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

அதேப்போல் காட்பாடி மெட்டுக் குளம் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக மண்டல துணை அலுவலர் ராகவன் சதீஷ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார். ஊரக வீடுகள் பழுதுபார்த்தல், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின்கீழ் வீடு கட்ட தகுதியான பயனாளிகள் இறுதி செய்யப்பட்டனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!