தமிழகம்

காட்பாடியில் கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்களுக்கு 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

84views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட அனைத்து முன்னாள் இராணுவத்தினர் சார்பில் 15-ம் தேதி வியாழக்கிழமை காலையில் 15.06.21-ம் ஆண்டு நடந்த கல்வான் பள்ளதாக்கில் ஒரு இராணுவ அதிகாரி உள்ளிட்ட 20 இராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  அதன் 3-ம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு புகைபடத்திற்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் கே.சிவக்குமார் தலைமையில் சிறப்பு விருந்தினராக 10-வது என். சி.சி.உதவி இயக்குநர் வெல்வர் சோல்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம், செயலாளர் ஜெகதீசன், ஆலோசகர் பாஸ்கரன், துணை ஒருங்கிணைப்பாளர் வடிவேலன், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் தசரதன், ஒருங்கிணைந்த பட்டாளத்தின் தலைவர் ஜெயக்குமார், என்.சி.சி.மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!