தமிழகம்

காட்பாடி தாலுகா சைனாம்பட்டடை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் விண்ணம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் மனு

126views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விண்ணம்பள்ளி கிராம பஞ்சாயத்து திமுக தலைவர் மகாலட்சுமி தலைமையில் டி.கே.முரளி, மோகன்பாபு, பரமேஸ்வரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சி.என்.பட்டடைவி. எல். தனி 129 கூட்டுறவு கடன் சங்கத்தில் எங்களுக்கு 2020-ம் ஆண்டு முதல் எந்த வித கடனும் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் நாங்கள் குற்றப்பிரிவில் உள்ளதாகவும், அதிகாரிகள் மீது உள்ள குற்றம் நீங்கினால் கடன் வழங்க முடியும் என்று கூறுகின்றனர்.  எந்த தவறும் எங்கள் மீது இல்லாத நிலையில் எங்களுக்கு தொடர்ந்து கடன் வழங்க மறுக்கிறார்கள்.  அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கூறியுள்ளனர்.  மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!