தமிழகம்

காட்பாடி அருகே திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் கிணற்றில் குதித்து விபரீத முடிவு

81views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரது இளைய மகன் சரத்குமார்(25) இவருக்கு திருமணம் ஆகவில்லை கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜாப்ராபாத் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  பிறகு காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேஷ் தலைமையில் கிணற்றிலிருந்து சரத்குமார் உடலை மீட்டனர்.  இதுகுறித்து விருதம் பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.  இதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை சரத்குமார் ஒரு தலை பட்சமாக காதலித்ததாக தெரிகிறது?
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!