தமிழகம்

காட்பாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முறைகேடுகளை கண்டித்து வேலூர் மாவட்ட அமமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

30views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சி.என்.பட்டடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (திமுக ஒன்றிய செயலாளர் கருணாகரன் இதன் தலைவராக தற்போது உள்ளார்) நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்து கடன் சங்கம் அருகில் வேலூர் மாவட்ட அமமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  வேலூர் மாநகர செயலாளர் ஏ.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ.என்.ஜி.பார்த்தீபன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
முன்னாள் துணை மேயர் தருமலிங்கம், புறநகர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், தலைமை நிலைய கழக பேச்சாளர் பிரம்மபுரம் சதீஷ்குமார், ராணிப்பேட்டை மாவட்ட அவைத்தலைவர் பாண்டுரங்கன் காட்பாடி ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ், மகளிரணி கௌதமி, மஞ்சுளா. மற்றும் அரக்கோணம், ராணிப்பேட்டை, வேலூர், காட்பாடி பகுதி அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.  ஏற்பாடு மற்றும் நன்றியுரையை சோளிங்கர் மேற்கு ஒன்றிய அமமுக செயலாளர் டி.பாபு மற்றும் பகுதி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!