தமிழகம்

காட்பாடியில் பள்ளி மாணவன் மீது பைக் மோதியதியதில் 2 பேர் உயிரிழப்பு

29views
வேலூர் அடுத்த காட்பாடி பகுதி வெங்கடபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் தனுஷ் (17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வருகின்றார். சம்பவத்தன்று இரவு டியூசன் முடித்துவிட்டு குடியாத்தம் – காட்பாடி சாலையை கடக்க முயன்றபோது காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19) என்ற வாலிபர் காட்பாடியிலிருந்து குடியாத்தம் சாலையில் வேகமாக சென்றபோது, மாணவன் தனுஷ் மீது மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
பைக் ஓட்டிய கதிரவன் படுகாயம் அடைந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபின் சிகிச்சை பலனின்றி கதிரவனும் உயிரிழந்தார். இது காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தாரும் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!