தமிழகம்

காட்பாடி வள்ளிமலை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

141views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் வரும் 9-ம் தேதி முதல் 11 -ம் தேதி வரை ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படவுள்ளது.  அதன் முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் கோயில் வளாகத்தில் நடந்தது.  காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா கலந்துகொண்டு காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புதுறை, போக்குவரத்துறை மற்றும் மின்சார துறை அலுவலர்களுக்கு முன் ஏற்பாடு குறித்து விளக்கினார்.
அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  பொன்னை காவல் ஆய்வாளர் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், வள்ளிமலை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி, மேல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நித்தியானந்தன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!