தமிழகம்

காட்பாடி அருகே விடுமுறையில் வந்த இளம் ராணுவ வீரர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

678views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (23).  வட மாநிலத்தில் ராணுவவீராக பணியாற்றி வந்த பாஸ்கரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் கோரந்தாங்கலுக்கு வந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தின் அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சென்னை மார்க்கமாக சென்ற ரயில் மோதி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.  விடுமுறையில் வந்த இளம் ராணுவ வீரர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!