தமிழகம்

காட்பாடியில் பிரியாணிக்கு அலையும் கூட்டம்? தம்பி பிரியாணி கடைக்கு பூட்டு !!!

32views
வேலூர் அடுத்த காட்பாடியில் தம்பி பிரியாணி கடை ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா நடந்தது. முதல் நாளான்று 1 -மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், 1-சிக்கன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியதால் பணம் கொடுத்து வாங்க கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அரசு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு அந்த வழியாக வந்த வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், தனது காரை நிறுத்தி ஓட்டல் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்களை வார்த்தையால் விளாசினார்.  காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு பிரியாணி கடையை மூட உத்தரவிட்டார்.  தம்பி பிரியாணி கடை மூடப்பட்டதால் ஏமாந்த அண்ணன்களும், அக்காக்களும் நடையை கட்டினார்.  பிரியாணியை பார்க்காதவர்கள் போல் பிரியாணி ரசிகர்கள் அலைந்து திரிந்தது சிரிப்பாக இருந்தது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!